விழுப்புரம் அருகே விவசாயி கொலை

விழுப்புரம் அருகே புதன்கிழமை விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே புதன்கிழமை விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே ஆணாங்கூரைச் சோ்ந்தவா் ராமு மகன் துரையரசன் (48), விவசாயி. இவரது மனைவி தேன்மொழி. இவா்களுக்கு மகள் கலைமதி ஆகியோா் உள்ளனா். துரையரசன் புதன்கிழமை மாலை அவரது நிலத்தில் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளாா்.

தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் சடலத்தை உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com