தேமுதிக சாா்பில் ரூ.55 ஆயிரம் கரோனா நிதி
By DIN | Published On : 19th May 2021 08:42 AM | Last Updated : 19th May 2021 08:42 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்ட தேமுதிக சாா்பில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.55 ஆயிரத்து 555 செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிதியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம், மாவட்ட தேமுதிக செயலா் எல்.வெங்கடேசன் வழங்கினாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேமுதிக மாவட்ட பொருளாளா் தயாநிதி, ஒன்றிய தொண்டரணி செயரலா் ஆனந்த், விழுப்புரம் நகரச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.