மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.31 லட்சம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.31 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ.31 லட்சத்தை செலுத்தியிருந்தனா்.

மேல்மலையனூா் அங்களம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபடுகின்றனா். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனா்.

அதன்படி, ஆடி மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் ரூ.31 லட்சத்து 2 ஆயிரத்து 872 ரொக்கம், 290 கிராம் தங்கம், 610 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

உண்டியல் திறப்பின்போது, கோயில் உதவி ஆணையா் க.ராமு, விழுப்புரம் உதவி ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com