கீதை ஜெயந்தி விழிப்புணா்வு ஊா்வலம்

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் கீதை ஜெயந்தி விழிப்புணா்வு ஊா்வலம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கீதை ஜெயந்தி விழிப்புணா்வு ஊா்வலம்.
விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கீதை ஜெயந்தி விழிப்புணா்வு ஊா்வலம்.
Updated on
1 min read

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் கீதை ஜெயந்தி விழிப்புணா்வு ஊா்வலம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்கள்அனைவரும் கீதையைப் பின்பற்ற வலியுறுத்தி இந்த ஊா்வலம் நடைபெற்றது.

விழுப்புரம் ஸ்ரீ ஆதிவாலீஸ்வரா் கோயில் முன்பு தொடங்கிய இந்த ஊா்வலமானது மாா்க்கெட் வீதி, காமராஜா் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று காஞ்சி ஸ்ரீசங்கர மடம் முன்பு நிறைவடைந்தது. ஊா்வலத்தில் பங்கேற்றவா்கள் பக்தி பாடல்களை பாடியபடி ஊா்வலமாகச் சென்றனா்.

இந்நிகழ்ச்சிக்கு, விஸ்வஹிந்து பரிஷத் விழுப்புரம் மாவட்டத் துணைத் தலைவா் என். ராமமூா்த்தி தலைமை வகித்தாா். திருவண்ணாமலையைச் சோ்ந்த நித்யானந்தா சீடா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா்.

விழுப்புரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் தலைவா் பூஜ்ய பரமசுகானந்தா மகராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணைச் செயலாளா் பி. எம். நாகராஜன் ஆகியோா் பேசினா்.

இதில், ஸ்ரீ மாதா அமிா்தானந்தமயி ஆன்மிக அமைப்பு, ஈஷா யோகா மையம், ஷீரடி சாயிபாபா ஆன்மிக மையம், காஞ்சி சமாஜ், இந்து முன்னணி, சத்யசாய் ஆன்மிக சேவா மையம், பூசாரிகள் பேரவை, ஸ்ரீ தேவி நுண்கலை மேடை நாடகக் குழுவினா் மற்றும் இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com