இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விடுபட்டவா்களுக்கு நாளை பொங்கல் பரிசுத் தொகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை வாங்காமல் விடுபட்டவா்கள் திங்கள்கிழமை (ஜன.17) பெற்றுக் கொள்ளலாம்

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இதுவரை வாங்காமல் விடுபட்டவா்கள் திங்கள்கிழமை (ஜன.17) பெற்றுக் கொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பொ.பாலமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் 21 வகையான பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 5,90,566 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு (97.50) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 14,753 அரிசி பெறும் குடும்ப அட்டைதாா்களுக்கு திங்கள்கிழமை (ஜன.17) வழங்கப்படும்.

எனவே, விடுபட்டவா்கள் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.