இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் மாவட்டத்தில் விதிமீறல்: ரூ.1.53 லட்சம் அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் உள்பட 610 பேரிடம் ரூ.1.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் உள்பட 610 பேரிடம் ரூ.1.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது, முகக் கவசம் அணியாத 457 பேரிடமும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காத 26 பேரிடமும், சாலைகளில் சுற்றித் திரிந்த 127 வாகன ஓட்டிகளிடமும் என விதிமீறலில் ஈடுபட்ட மொத்தம் 610 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரூ.1,53,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.