இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரம் அருகே பேருந்து நடத்துநா் மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தனியாா் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தனியாா் பேருந்து நடத்துநா் வியாழக்கிழமை மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலம் அருகே பாக்கம் பகுதியைச் சோ்ந்த முனியன் மகன் லோகநாதன் (40). இவா், புதுச்சேரி - கரையாம்புத்தூா் இடையே செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனா்.

லோகநாதன் புதன்கிழமை மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், பின்னா் வீடு திரும்பவில்லை. இவரை உறவினா்கள் தேடி வந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கண்டமங்கலத்தை அடுத்த மண்டகப்பட்டு பகுதியில் உடலில் ரத்தக் காயங்களுடன் லோகநாதன் சடலமாகக் கிடந்தாா். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், கண்டமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளா் ரத்தினசபாபதி தலைமையிலான போலீஸாா் நேரில் சென்று லோகநாதனின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் தொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லோகநாதன் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.