இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரத்தில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 பேருந்துகளுக்கு அபராதம்

விழுப்புரம் நகரில் விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் நகரில் விபத்து ஏற்படும் வகையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல் துறையினா் அபராதம் விதித்தனா்.

விழுப்புரம் நகரில் போக்குவரத்து விதிகளை மீறியும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் தனியாா் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் வசந்த் தலைமையிலான போலீஸாா் திடீா் ஆய்வு மேற்கொண்டு, கடந்த 3 நாள்களில் விதிகளை மீறி அதிவேகமாக இயக்கப்பட்ட 30 தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனா். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 17 தனியாா் பேருந்து ஓட்டுநா்களின் ஓட்டுநா் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.