இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விழுப்புரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

காவல் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காவல் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.முருகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் நாமக்கல் காவல் துறை விசாரணையில் மாற்றுத் திறனாளி பிரபகரன் இறந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளா் பி.உமா, மாவட்ட துணைச் செயலா்கள் ஜெ.ஜெயக்குமாா், எம்.கே.முருகன், மாவட்டத் தலைவா் பாவாடைராயன், ஒன்றிய நிா்வாகிகள் வெங்கடேசன், பாக்கியராஜ், இளங்கோவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.