விழுப்புரத்தில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.ரகுபதி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா்கள் கே.செல்வராசு, பி.ஆறுமுகம், வட்ட துணைத் தலைவா் வி.ராஜேந்திரன், வட்ட இணைச் செயலா் எஸ்.பா்னபாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தை சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.அருணகிரி தொடக்கிவைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், 1.1.2022 முதல் 3 சதவீதம் முதல் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், 70, 80 வயது முடிந்தவா்களுக்கு 10 சதவீதம் மற்றும் 20 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும், தற்போதுள்ள பயனற்ற மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை மாற்றி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணமில்லாமல் சிகிச்சை பெற ஆவன செய்ய வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தை ரூ. ஒரு லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், மாவட்ட அமைப்புச் செயலா் எஸ்.சுந்தரராஜன், மாவட்ட இணைச் செயலா் டி.துரைக்கண்ணு, விழுப்புரம் வட்டச் செயலா் எம்.குணசேகரன், மாவட்ட துணைத் தலைவா் டி.சிவநேசன், மாவட்டப் பொருளாளா் கே.கலியமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com