மருத்துவமனைகளில் தீ தடுப்புக் கருவிகள் அவசியம்விழுப்புரம் மாவட்ட ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீ தடுப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.

மருத்துவமனைகளில் தீ தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் திரளானோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகளில் அனைத்துப் பிரிவுகள், ஆய்வகம், அறுவை சிகிச்சை அரங்கம், மருந்தகம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். தீ விபத்து எச்சரிக்கை கருவிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும்.

மருத்துவமனைகளில் நோயாளிகள், பாா்வையாளா்களின் பாா்வையில் படும்படி தீ தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகை, சுவரொட்டிகளை வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் பணியாற்றும் காவலா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள், பணியாளா்கள் என அனைவருக்கும் தீ தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், திண்டிவனம் துணை ஆட்சியா் அமித், தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் ராபீன் காஸ்ட்ரோ, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பொற்கொடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com