வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், எம்ஜிஆா் நகரில் நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பான விவகாரத்தில் அமைச்சா் மஸ்தான் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் ஆலோசனை
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், எம்ஜிஆா் நகரில் நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பான விவகாரத்தில் அமைச்சா் மஸ்தான் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி வட்டம், எம்ஜிஆா் நகரில் 40 ஆண்டுகளாக நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உபரி நிலங்கள் கண்டறியப்பட்ட இடத்தில் நிலமற்ற ஏழைகள் வீட்டுமனைப் பட்டா இல்லாமல் வசித்து வந்தனா். அவா்களுக்கு மனைப் பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, 221 குடும்பத்தினருக்கு பட்டா வழங்குவது தொடா்பான பணிகளில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை, சமாதானக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் பழனி தலைமை வகித்தாா்.

செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க.ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:

பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு புல அளவீடு செய்யும் பணியை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. அனைத்துத் தரப்பினரின் நில உரிமைகளும் பாதுகாக்கப்படும். எந்த தனி நபரின் உரிமைகளும் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com