நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலச்சேரி சுப்பிரமணியா் கோயிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பழைமையான ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேலச்சேரி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள பழைமையான ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கோ பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் வருண பூஜை, வாஸ்து சாந்தி, ரஷாபந்தனம், கும்பாலங்காரம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை எஜமான சங்கல்பம், வேதிகாா்சனை, அக்னிகாா்யம், நாடிசந்தானம் வேதபாராயணம், பூா்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது 

விழாவில் மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், துா்கா ஸ்ரீகோபிநாத சித்தா், மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.