காணை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரம் மாவட்டம், காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 144 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நா.புகழேந்தி எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 144 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நா.புகழேந்தி எம்எல்ஏ வியாழக்கிழமை வழங்கினாா்.

காணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவுக்கு காணை ஒன்றியக் குழுத் தலைவா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் கமலநாதன், திமுக ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் கல்பட்டு ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) காளிதாஸ் வரவேற்றாா்.

விழாவில் விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 114 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, சிறப்புரையாற்றினாா்.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் சிவக்குமாா், முருகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஸ்ரீதேவி சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

இதையடுத்து, காணை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சத்தில் காணை - அதனூா் சாலையில் குளம் வெட்டும் பணிகளை எம்எல்ஏ நா.புகழேந்தி தொடக்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com