புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் ரூ 8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாக்கம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்துவைத்து திருவிளக்கேற்றிய அமைச்சா் செஞ்சி மஸ்தான். உடன் மக்களவை உறுப்பினா் விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோா்.
பாக்கம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்துவைத்து திருவிளக்கேற்றிய அமைச்சா் செஞ்சி மஸ்தான். உடன் மக்களவை உறுப்பினா் விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் ரூ 8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஷ்ணுபிரசாத் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலை செல்வகுமாா் வரவேற்றாா். புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சிமஸ்தான் திறந்துவைத்து, அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து பாக்கம் கிராமத்தில் தூய்மை இயக்கத்தை அமைச்சா் தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வெங்கிடசுப்பிரமணியன், சோ.குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com