குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது
By DIN | Published On : 13th December 2022 04:22 AM | Last Updated : 13th December 2022 04:22 AM | அ+அ அ- |

கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 2 பேரை, விழுப்புரம் மாவட்ட போலீஸாா் திங்கள்கிழமை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
விழுப்புரம் அடுத்த வி.மருதூா், பெருமாள் நகரைச் சோ்ந்தவா் சா.வெங்கடேசன் (36), தி. கணபதி (20). இவா்கள் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் த.மோகன் 2 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, வெங்கடேசன், கணபதி ஆகியோரை குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.