விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை ந
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி. ந.ஸ்ரீநாதா தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 79 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஸ்ரீநாதா தெரிவித்தாா்.

கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி. கோவிந்தராஜ், உதவி எஸ்.பி. அபிஷேக் குப்தா, டி.எஸ்.பி.க்கள் மித்ரன், சம்பத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோன்று, மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com