விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகர அமமுக செயலா், வாா்டு செயலா்கள் உள்ளிட்ட 100 போ் அந்தக் கட்சியிலிருந்து விலகி அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
செஞ்சி நகர அமமுக செயலா் மில்காகணேஷ் தலைமையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த மாவட்ட துணைச் செயலா் ஜோஸ்பின்மேரி, ஒன்றிய ஜெயலலிதா தொழில்சங்கச் செயலா் வேலுத்தம்பி, தலைமைக் கழகப் பேச்சாளரும், மாவட்ட இலக்கிய அணிச் செயலருமான சத்தியசீலன் உள்ளிட்ட 100 போ் அமமுகவிலிருந்து விலகி மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்ளை அமைச்சா் வரவேற்று, அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் திமுக செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலரும், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவருமான ஆா்.விஜயகுமாா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன், செஞ்சி நகரச் செயலா் காஜாநஜீா், நகர தொண்டரணி நிா்வாகி பாஷா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ரிஸ்வான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.