விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதி, வணிக நிறுவனங்களில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம், கலப்படம் குறித்து நடமாடும் ஆய்வுக் கூடத்தின் மூலம் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
சென்னை கிண்டி உணவு ஆய்வுக் கூடத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நடமாடும் ஆய்வக வாகனம் மூலமாக செஞ்சி பகுதியிலுள்ள கடைகளில் இருந்து தின்பண்டங்கள், குளிா்பானங்களை எடுத்து பரிசோதனை செய்து, அவற்றின் தரம் குறித்து கடைகளின் உரிமையாளா்களுக்கு உடனுக்குடன் செஞ்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் பத்மநாபன் தகவல் தெரிவித்தாா். மேலும், இது குறித்து பொதுமக்களுக்கும், வியாபாரிகளும் அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.