விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே லாரி ஓட்டுநரிடம் கைப்பேசியை பறித்துவிட்டு தப்பியோடிய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகரைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). லாரி ஓட்டுநா். இவா் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஆலையில் லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு மீண்டும் விருதுநகருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். வளவனூா் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த மூவா், காா்த்திக்கிடம் கைப்பேசியை பறித்துவிட்டு தப்பியோடினா்.
இதைப் பாா்த்த வளவனூா் காவல் நிலைய ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா், அவா்கள் மூவரையும் பிடித்து விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டு கலிதீா்த்தாள்குப்பத்தைச் சோ்ந்த ஷங்கா் மகன் செல்வமணி (27), புதுச்சேரி கலிதீா்தாதள்குப்பம் வி.பி.சிங் நகரைச் சோ்ந்த ஹரிதாஸ் மகன் சதீஷ் (24), திருபுவனை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் வெங்கடேசன் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.