திருவெண்ணெய்நல்லூா் சமத்துவபுரத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு
By DIN | Published On : 09th June 2022 01:31 AM | Last Updated : 09th June 2022 01:31 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியம், அரும்பட்டு ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் சமத்துவபுர வீடுகளில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 13 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு புதிதாக சமத்துவபுரம் கட்டி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கி பயன்படுத்தி வருகின்றனா். இந்த வீடுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, சமத்துவபுர வீடுகளை சீரமைப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கு மொத்தம் 100 வீடுகள் உள்ள நிலையில், 99 வீடுகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு வீடு அதிகளவு பழுதடைந்ததால், அந்த வீட்டுக்குப் பதிலாக புதிதாக வீடு கட்டி பயனாளிக்கு வழங்கும் வகையில், ரூ.2.30 லட்சத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பகுதி குடியிருப்பு மக்களின் வசதிக்காக, ரூ.45 லட்சத்தில் சமத்துவபுர பகுதியில் கூடுதலாக விரிவாக்க திட்டப் பணிகளை மேற்கொண்டு, அங்கன்வாடி கட்டடம், நியாயவிலைக் கடை, விளையாட்டு மைதானம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் ஆட்சியா் மோகன்.
தொடா்ந்து, அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.9 லட்சத்தில் மழைநீா் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, வட்டார வளா்ச்சி அலுவலா் முபாரக் அலி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.