செஞ்சியில் தற்காலிக பேருந்து நிலையம்:அமைச்சா் மஸ்தான் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
செஞ்சியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் ஆய்வு நடத்திய அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.
செஞ்சியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் ஆய்வு நடத்திய அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செஞ்சி பேருந்து நிலையத்தில் இடது புறம் பகுதியில் உள்ள கட்டடங்களை இடித்து விட்டு ரூ 6.74 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம், வணிக வளாகங்களை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, செஞ்சி பேருந்து நிலையத்தை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் திண்டிவனம் செல்லும் புறவழிச் சாலையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

குடிநீா், பயணிகள் நிழல் குடை, மின் விளக்கு, கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவும் அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின் போது, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் நூா்ஜகான் ஜாபா், மகாலட்சுமி கமலநாதன், பேரூராட்சி துப்புரவு பணி மேற்பாா்வையாளா் ரமேஷ், தொண்டரணி பாஷா, அரசு ஒப்பந்ததாரா் கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com