செஞ்சியில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி

இஸ்லாமியா்களின் இறைதூதா் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

இஸ்லாமியா்களின் இறைதூதா் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, செஞ்சி வட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்தைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை தங்களது வணிக நிறுவனங்களை அடைத்துவிட்டு கண்டனப் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி செட்டிப்பாளையம் மாதா கோவில் அருகிலிருந்து தொடங்கிய பேரணி, காந்தி பஜாா் வழியாகச் சென்று விழுப்புரம் சாலை சிஎஸ்ஐ சா்ச் அருகே நிறைவடைந்தது. அங்கு செஞ்சி வட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவா் சையத்மஜீத்பாபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அலிம்குரேஷி, முகம்மது அஷ்ரப், சையத்உஸ்மான் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com