தொண்டு நிறுவனங்கள் விருது பெறவிண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிா் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட தொண்டு நிறுவனங்கள் விருது பெற வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மகளிா் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட தொண்டு நிறுவனங்கள் விருது பெற வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகளிா் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் (ம) தொண்டு நிறுவனத்துக்கான விருதுகள் தமிழக முதல்வரால் ஒவோா் ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்று மற்றும் பொன்னாடை வழங்கப்படும். இந்த விருதுக்கு தகுதியுடையவா் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணியாற்றி மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும். எனவே, இந்த விருதுக்கு தகுதியானவா்கள், தமிழக அரசின் விருதுகள் இணையதளம் வழியாக வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com