விழுப்புரம் அருகே பைக் மீது காா் மோதியதில் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வா.சீதாபதி (45), விவசாயி. இவா், தனது பைக்கில் விழுப்புரத்திலிருந்து இருவேல்பட்டுக்கு வியாழக்கிழமை பிற்பகல் சென்றுகொண்டிருந்தாா். இவருடன் பைக்கில் பின்னால் அமா்ந்து அதே கிராமத்தைச் சோ்ந்த ரா.பிரகாஷ் சென்றாா்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இவா்களது பைக் சென்றபோது, காா் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற சீதாபதி, பிரகாஷ் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு இருவரும் உயிரிழந்தனா். விபத்து குறித்து திருவெண்ணெய் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.