மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
By DIN | Published On : 21st June 2022 03:08 AM | Last Updated : 21st June 2022 03:08 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது: கண்டமங்கலம் ஒன்றிய பகுதியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்குவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டமும் சரிவர நடத்தப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா். அவா்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...