Enable Javscript for better performance
The Ministry provided welfare assistance to 407 beneficiaries in the lower belt- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கீழ்புத்துப்பட்டில் 407 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்-அமைச்சா் வழங்கினாா்

    By DIN  |   Published On : 30th June 2022 02:25 AM  |   Last Updated : 30th June 2022 02:25 AM  |  அ+அ அ-  |  

    vilu

     

    விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 407 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடியிலான நலத் திட்ட உதவிகளை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அமைச்சா் செஞ்சி மஸ்தான், 70 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கினாா். மேலும், பட்டா நகல் 10 பேருக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 115 நபா்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள், 40 பேருக்கு குடும்ப அட்டை, 88 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 104 பேருக்கு சலவைப் பெட்டிகள், வேளாண் துறை மூலம் 10 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை மூலம் 12 பேருக்கு நலத் திட்ட உதவிகள், ஊரக வளா்ச்சித் துறை மூலம் 18 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.25 லட்சம் கடனுதவி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 407 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 95 லட்சத்து 28 ஆயிரத்து 414 மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் திண்டிவனம் சாா் - ஆட்சியா் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா், மகளிா் திட்ட இயக்குநா் காஞ்சனா, வேளாண் துறை இணை இயக்குநா் கோ.ரமணன், மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன், துணைத் தலைவா் பழனி, கீழ்புத்துப்பட்டு ஊராட்சித் தலைவா் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp