கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

விழுப்புரம் காக்குப்பத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் காக்குப்பத்தில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியா் த.மோகன், சட்டப் பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் ஏற்பட்ட பழுதால் சுத்திகரிப்பின்றி கழிவுநீா் வெளியேற்றப்படும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, பழுதை சரிசெய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையா் சுரேந்திர ஷாவிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி, வட்டாட்சியா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com