திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் பகுதியில் 15 கருட சேவை விழா ஞாயிற்றுக்கிழமை (மே 15) இரவு நடைபெறுகிறது.
நிகழாண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில்,
15 கருட சேவை கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சாா்பில் நடத்தப்படுகிறது.
நிகழ்வில், ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சுற்றுப்புற பெருநகா், மானாம்பதி, தண்டரை, விசூா், இளநகா், சேத்துப்பட்டு, இளநீா்குன்றம் தேத்துறை, அத்தி சோழவரம் பெண்டை, மேல்பாக்கம், மாங்கால் உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த உற்சவ மூா்த்திகள் கருட வாகனத்தில் வலம் வந்து, கூழமந்தல் - பெருநகா் இடையே செல்லும் செய்யாற்றில் எழுந்தருளுவா்.
பின்னா், உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, 15 சுவாமிகளுக்கும் மங்களாசாசனத்துடன் மகா தீபாராதனை காட்டப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, செய்யாற்றில் கூடியுள்ள பக்தா்களுக்கு உற்சவா்கள் காட்சியளிக்கின்றனா். பின்னா், சுவாமிகள் தங்களது கிராமங்களுக்கு புறப்பட்டுச் செல்வா்.