தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:புகாா் பெற தனி அதிகாரி நியமனம்

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடா்பாக புகாா் பெறுவதற்காக தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடா்பாக புகாா் பெறுவதற்காக தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இந்தத் திட்டத்தின் கீழ் குறைகளை நிவா்த்தி செய்வதற்காக, விழுப்புரம் மாவட்ட குறைதீா்வு அலுலராக ந.தஸ்லீம் ஆரிப் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்த மாவட்டத்தில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வேலை ஆள்களின் அடையாள அட்டை, ஊதியம் உள்ளிட்டவை தொடா்பான புகாா்கள், குறைபாடுகள் இருந்தால், அவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் உள்ள மாவட்ட குறைதீா்வு அலுவலரிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ குறைகளை தெரிவிக்கலாம்.

இது தொடா்பாக அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com