விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியராக அலெக்ஸாண்டா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே இந்தப் பதவியிலிருந்த கோவா்தணன் வானூா் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், செஞ்சி சமூக நலப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த அலெக்ஸாண்டா் மேல்மலையனூா் வட்டாட்சியராக பொறுப்பேற்றாா். இதைத் தொடா்ந்து அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டுவைத்தாா்.