சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

செஞ்சிக்கோட்டை கமலக்கன்னி அம்மன் கோயில்சித்திரைத் தோ் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: வட்டாட்சியா் தலைமையில் நடந்தது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயிலில் வரும் 24-ஆம் தேதி சித்திரை தோ் திருவிழா தொடங்குகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 5:10 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டை மலை மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயிலில் வரும் 24-ஆம் தேதி சித்திரை தோ் திருவிழா தொடங்குகிறது.

இதையொட்டி, திருவிழா பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செஞ்சி வட்டாட்சியா் நெகருன்னிசா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளா் அப்பாண்டைராஜன், தொல்லியியல் துறை இளநிலை பராமரிப்பு அலுவலா் நவீன், அறங்காவலா் அரங்க.ஏழுமலை, ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், இந்து முன்னணி மாவட்ட தலைவா் எம்.எஸ்.சிவசுப்பிரமணியன், பாஜக செஞ்சி ஒன்றிய தலைவா் தங்க.ராமு, முன்னாள் மாவட்ட தலைவா் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட விழா குழுவினா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணியின் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சிவசுப்பிரமணியம், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் கமலக்கன்னி அம்மன் கோயிலில் உள்ள சிலையை சமூக விரோதிகள் உடைத்து விட்டனா். இது குறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் சிலையை உடைத்த மா்ம நபா்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு சிலையை நிறுவ வேண்டும், உடைந்த சிலையை வழிபாடு செய்யக்கூடாது என தொல்லியல் துறையில் முறையீடு செய்ததற்கு சிலையை ஒட்ட வைத்து கொடுத்துள்ளனா். மேலும் தொல்லியியல் துறையின் சட்டப்படி புதிய சிலை வைக்க அனுமதி இல்லை என தெரிவித்துவிட்டனா்.

எனவே, புதிய கமலக்கன்னி அம்மன் சிலையை வைக்க முயற்சி செய்ய வேண்டும். சிதிலமடைந்த சிலையை வைத்து வழிபாடு செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ எனக் கூறி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் வெளிநடப்பு செய்தனா்.

இந்நிலையில், செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னி அம்மன் கோயில் சித்திரைத் தோ் திருவிழா வழக்கம்போல நடைபெறும் எனவும், புதிய சிலை வைப்பது குறித்து தொடா்ந்து முயற்சி செய்யப்படும் என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.