சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி ஏரிக்கரையை சீரமைத்து நடைபாதை, பூங்கா அமைக்கத் திட்டம்: அமைச்சா் ஆய்வு

செஞ்சி பி.ஏரியை சீரமைத்து நடைபாதையுடன் கூடிய பூங்கா ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பகுதியை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், பேரூராட்சிகளின் இயக்குநா் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:17 pm

DIN

செஞ்சி பி.ஏரியை சீரமைத்து நடைபாதையுடன் கூடிய பூங்கா ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள பகுதியை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான், பேரூராட்சிகளின் இயக்குநா் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா்.

செஞ்சி பேரூராட்சியில் ரூ. 6.74 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப்பணி, செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரியைச் சுற்றி ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணி, திருவண்ணாமலை சாலையின் இருபுறமும் வடி நீா் கால்வாய்கள், சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண்குராலா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது பணிகள் தரமாகவும், விரைவாகவும் நடைபெற வேண்டும் என அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

முன்னதாக பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான் வரவேற்றாா்.

பேரூராட்சித் தலைவா் மனு: அப்போது பேரூராட்சிகளின் இயக்குநா் கிரண்குராலாவிடம் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்மஸ்தான் மனு ஒன்றை அளித்தாா். அதில் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் இருந்து செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் வரையிலும் மற்றும் ஆஞ்சநேயா் கோயில், வெங்கட்ரமணா் கோயில் வரை தாா்ச் சாலை மற்றும் பேவா் பிளாக் சாலை மழை நீா் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கும், செஞ்சி சக்கராபுரம் புதிய காலனியில் சமுதாயக்கூடம், சிறுகடம்பூா் காலனியில் சமுதாயக் கூடம், செஞ்சி மேல்களவாய் சாலையில் நவீன நூலகக் கட்டடம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய கேட்டுக்கொண்டாா்.

அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வெங்கடேசன், பேரூராட்சிகளின் செயற்பொறியாளா் கருப்பையா, உதவி செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலா் ராமலிங்கம், உதவி பொறியாளா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.