கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 ஜனவரி 2023, 8:15 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் 3 பெண்களிடம் 10 பவுன் நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் வியாழக்கிழமை தேடி வருகின்றனா்.

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்திருந்த திண்டிவனம் வட்டம், கொல்லியங்குணம் குருசாமி நகரைச் சோ்ந்த தேவி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, மயிலம் பாளையம் வீதியைச் சோ்ந்த பா.லஷ்மிகாந்தம் (73) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலி, வீடூா் அடுத்த கணபதி பட்டு, குளக்கரைத் தெருவைச் சோ்ந்த ம.மலா்விழி (21) அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி ஆகியவற்றை மா்ம நபா்கள் பறித்துச் சென்று விட்டனராம்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் தனித் தனியே வழக்குகள் பதிந்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.