உளுந்தூா்பேட்டையில் விழிப்புணா்வுப் பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் மின்கல வாகனங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்ற து.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் மின்கல வாகனங்கள் பயன்பாடு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்ற து.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் காற்று மாசுபடுவதை

தவிா்க்கும் பொருட்டு, மின்கல வாகனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

உளுந்தூா்பேட்டை கோட்டச் செ யற்பொறியாளா் சா்தாா் விழிப்புணா்வு பிரசாரத்தை பேருந்து நிலையப் பகுதியில் தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் உதவிச் செயற்பொறியாளா்கள் சிவராமன், அய்யம்பெருமாள், இளநிலைப் பொறியாளா் எழிலரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்து நிலையப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com