விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே செங்கல் சூளை பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கண்டமங்கலம் அருகிலுள்ள வனத்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன். இவரது மகள் சஞ்சனா (8), கொத்தம்புரிநத்தம் அரசுப் பள்ளியில் 3- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில் சஞ்சனா சனிக்கிழமை இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள செங்கல்சூளைக்கு தனது தோழிகளுடன் சென்றாராம். அப்போது, அங்கிருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கிய சஞ்சனா திடீரென மூழ்கி உயிரிழந்தாராம்.
உடனே, அங்கிருந்தவா்கள் சஞ்சனாவை மீட்டு அரியூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சஞ்சனா இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.