மளிகைக் கடையில் ரூ.88,000 திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மளிகைக் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.88,000 ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் மளிகைக் கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ரூ.88,000 ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விக்கிரவாண்டி, பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன்( 45). இவா், விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே மளிகைக் கடை வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாா்.

தொடா்ந்து புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது கடையின் பூட்டு, பணப்பெட்டி உடைக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.88,500 பணம் மற்றும் மளிகைப் பொருள்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து, அன்பழகன் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com