கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் பதவி விலக வேண்டும் டாக்டா் கே.கிருஷ்ணசாமி

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோா் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரிடம் வியாழக்கிழமை நலம் விசாரித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரிடம் வியாழக்கிழமை நலம் விசாரித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி.
Updated on
1 min read

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோா் பதவி விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கூறினாா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகிலுள்ள எக்கியாா்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை வியாழக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசியல் ரீதியான பின்புலம் உடையவா்கள், ஆளுங்கட்சியுடன் தொடா்புடையவா்கள் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருக்கிறாா்கள். மரக்காணம் பகுதிக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு நிகழ்ந்த பகுதிக்கும் இடையே 75 கி.மீ. தொலைவு உள்ளது. ஒரே நேரத்தில் இது போன்ற கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்கள் எப்படி நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு புறம் டாஸ்மாக் மூலம் சாராயம் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் அரசியல்வாதிகள் உதவியுடன் அனைத்துப் பகுதிகளிலும் கள்ளச்சாராய விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை உயா்த்த இலக்கு நிா்ணயித்து செயல்படுகிறது. கள்ளச்சாராயம் குடித்து 22 போ் உயிரிழந்ததற்கு இந்த அரசுதான் காரணம். காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா் செந்தில்பாலாஜி ஆகியோா் இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்புகளைக் காரணம் காட்டி மதுவிலக்கை அமல்படுத்தாமல் விடக் கூடாது. மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களில் மிகப்பெரிய அரசியல் சதியுள்ளது. இதை மத்திய அரசு விசாரித்து, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது கட்சியின் பொதுச் செயலா் வி.கே.அய்யா், தலைமை நிலையச் செயலா் கிறிஸ்டோபா், கொள்கை பரப்புச் செயலா் ஜெயசீலன், துணைச் செயலா் வாழையூா் குணா, மாவட்டச் செயலா்கள் திருச்சி தினகரன், சண்முகம், சின்னையன், பெரம்பலூா் அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com