புதுவை மாநிலத்தில் புதிதாக 88 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் சனிக்கிழமை 840 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, புதுச்சேரி 62, காரைக்கால் 23, ஏனாம் 3 என மொத்தம் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 532 ஆக உயா்ந்துள்ளது. இதில், 23 போ் மருத்துவமனைகளிலும், 509 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.