நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வரிக்கல் ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வரிக்கல் ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய குழு உறுப்பினா் உமாமகேஸ்வரி ஆனந்தன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி தலைவா் சீனிவாசன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

இதில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com