மாரியம்மன் கோயிலில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேல்மலையனூரை அடுத்துள்ள அண்ணமங்கலம் அருகே காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 30-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்திலிருந்த 3 கிராம் தங்க நகை, உண்டியலிலிருந்த ரூ.5 ஆயிரம் காணக்கையை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com