விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேல்மலையனூரை அடுத்துள்ள அண்ணமங்கலம் அருகே காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 30-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மா்ம நபா்கள், அம்மன் கழுத்திலிருந்த 3 கிராம் தங்க நகை, உண்டியலிலிருந்த ரூ.5 ஆயிரம் காணக்கையை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வளத்தி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.