விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.18) நடைபெறவுள்ளது.
ஆட்சியரகக் கூட்டரங்கில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, விவசாயம் சாா்ந்த தங்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.