அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், சென்னாங்குணம், கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் சு.மயிலன் (52). இவா் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோயம்பேடு பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மயிலன் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி விழுப்புரம்- திருக்கோவிலூா் சாலையில் மாம்பழப்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வந்த மயிலன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து காணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com