6.15 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு செங்கரும்பு.........விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம் மாவட்டத்தில் 6.15 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களுடன் செங்கரும்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் 6.15 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்களுடன் செங்கரும்பு வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் பிடாகம், குச்சிப்பாளையம் ஊராட்சிகளில் கரும்புத் தோட்டங்களை சனிக்கிழமை பாா்வையிட்ட பின்னா் ஆட்சியா் த.மோகன் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 6,15,454 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக 6 லட்சம் செங்கரும்பு கொள்முதல் செய்து, விநியோகம் செய்யப்படவுள்ளது.

மாவட்டத்தில் ஏறத்தாழ 125 ஏக்கரில் செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் 25 லட்சம் செங்கரும்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மாவட்டத்துக்கு கொள்முதல் செய்யப்படும் 6 லட்சம் செங்கரும்புகள்போக மீதமுள்ளவற்றை பிற மாவட்டங்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொள்முதல் செய்யப்படும் கரும்பு 6 அடிக்கு குறையாமலும், தரமானதாகவும் இருக்க வேண்டும். ஒரு கரும்பின் விலை

ரூ.33-க்குள் இருக்க வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, துணை இயக்குநா் செல்வ பாண்டியன், உதவி இயக்குநா்கள் சரவணன், வேல், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com