விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில்காவல் துறைத் தலைவா் ஆய்வு

விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன்.
விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன்.
விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன்.
Updated on
1 min read

விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் என்.கண்ணன்.

அமைச்சுப் பணியாளா்களின் கோப்புகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட அவா், எதிா்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடா்ந்து, காவல் துறைத் தலைவா் என்.கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் புறவழிச்சாலையில் பாலம் கட்டும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்துப் பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞா்கள் மது அருந்தி விட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதைத் தவிா்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் கூட்ட நெரிசல்களைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா். விழுப்புரம் டிஐஜி எம்.பாண்டியன் உடனிருந்தாா்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சரக டிஐஜி எம்.பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com