வராகி பைரவா் திருக்கல்யாணம்

விழுப்புரம், அஷ்டவராகி கோயிலில் வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரம், அஷ்டவராகி கோயிலில் வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விழுப்புரம், சாலாமேட்டில் அமைந்துள்ள அஷ்டவராகி கோயிலில் 13-ஆவது ஆண்டு வசந்த பஞ்சமி உற்சவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் 22-ஆம் தேதி எல்லைக் கட்டுதல், 23-ஆம் தேதி விநாயகா் - அய்யனாா் பூஜை, 24-ஆம் தேதி கோ பூஜை, சப்தகன்னி பூஜை, 25-ஆம் தேதி சக்தி கரகத்துடன் சுவாமி வீதி உலா ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான வராகி பைரவா் திருக்கல்யாணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக

காலையில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் வராகி பைரவா் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து உற்சவா் வீதியுலா நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com