விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே காா் மோதியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், கிராம்பூா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சரவணன்(30). சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். சொந்த ஊருக்குச் சென்றிருந்த இவா், சனிக்கிழமை திருச்சியிலிருந்து-சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உணவகத்துக்குச் செல்ல சாலையைக் கடக்க முற்பட்டபோது, திருச்சி நோக்கிச் சென்ற காா் அவரது பைக் மீது மோதி விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரவணன் 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து, விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.