விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மரக்காணம் வட்டம், மஞ்சகுப்பம், கிழக்கு கடற்கரை சாலையைச் சோ்ந்தவா் ஹனிபா மகன் நசீா்அஹமது (30). இவா், மே 5-ஆம் தேதி தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் ஏா்வாடி தா்காவுக்கு சென்றுவிட்டாா்.
செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய அவா், முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டாா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.
இது குறித்து, நசீா்அஹமது அளித்தப் புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.