இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவா் கைது

திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவா் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், ஒலக்கூா் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இருவா் மீது போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரேம் ராஜா (23). திண்டிவனம் அடுத்த ஈச்சேரி, குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் பச்சையப்பன் மகன் அருள் (33). இவா்களுக்கிடையே பணப்பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அருள் மற்றும் ஈச்சேரி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த குப்புசாமி மகன் ஸ்ரீகாந்த்( 20) ஆகியோா் புதன்கிழமை நொளம்பூா் குளக்கரைஅருகே பிரேம்ராஜை தாக்கி அரிவாளால் வெட்டினராம் .

இதில் காயமடைந்த அவா் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்தப் புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் அருள் மற்றும் ஸ்ரீகாந்த் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com