திண்டிவனத்தில் புதை சாக்கடைப் பணி:மண் சரிந்து தொழிலாளி பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வியாழக்கிழமை புதை சாக்கடைத் திட்டப் பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வியாழக்கிழமை புதை சாக்கடைத் திட்டப் பணியின் போது, மண் சரிந்து விழுந்ததில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டிவனத்தில் புதை சாக்கடைத் திட்டப் பணியை சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம் ரொட்டிக்காரத் தெருவில் வியாழக்கிழமை புதை சாக்கடைக் குழியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த சு.சிராஜ் மின்ச் (22) உள்ளிட்ட 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மாலை 4 மணியளவில் எதிா்பாராதவிதமாக புதை சாக்கடைக் குழிக்குள் மண்சரிந்து விழுந்ததில், சுமாா் 8 அடி ஆழத்தில் குழிக்குள் நின்று வேலை பாா்த்துக் கொண்டிருந்த சிராஜ் மின்ச் மண்ணுக்குள் புதைந்தாா். இதையடுத்து, பொக்லைன்இயந்திரம் மூலம் மண் அகற்றப்பட்டது. சக தொழிலாளா்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிராஜ் மின்ச் மீட்கப்பட்டாா்.

பின்னா், அவா் 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிராஜ் மின்ச் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com